For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர்கள்தான் எங்களுக்கு வேண்டும்.. அடம்பிடிக்கும் மும்பை இந்தியன்ஸ்.. ஐபிஎல் ஃபீவர் ஆரம்பம்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் ரோஹித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் இடம்பிடிப்பார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar

மும்பை: இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் இப்போதே பலமாக தொடங்க ஆரம்பித்துவிட்டது. இந்த முறையும் ஏலம் பெங்களூரில் நடக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

எந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிகம் ஆகிவிட்டது. சென்னை அணி மீண்டும் திரும்பி இருப்பதால் ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் மும்பை அணி எந்த வீரர்களை அணியில் தக்க வைக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. முக்கியமாக ரோஹித் சர்மா கண்டிப்பாக அணியில் இருப்பார் என்று கூறப்பட்டு உள்ளது.

ஐபிஎல் 11வது சீசன்

ஐபிஎல் 11வது சீசன்

எப்போதும் போல் இல்லாமல் ஐபிஎல் 11 வது சீசன் பல ஆச்சர்யமான விஷயங்களை கொண்டு இருக்கிறது. இதில் மிக முக்கியமானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐபிஎல்லுக்கு திரும்பி இருப்பது. அதேபோல் ராஜஸ்தான் அணியும் மீண்டும் ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்பி இருக்கிறது.

ஏலம் எப்போது

ஏலம் எப்போது

இதற்கான ஏலம் ஜனவரி மாதம் 27 மற்றும் 28 தேதிகளில் நடக்க உள்ளது. பல முக்கியமான வீரர்கள் மீண்டும் இந்த முறை ஏலத்திற்கு வர இருப்பதால் இந்த நிகழ்வு இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எப்போதும் போல் இந்த முறையும் ஏலம் பெங்களூரில் நடக்கும். ஒவ்வொரு அணிக்குமான பட்ஜெட் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்பு 66 கோடியாக இருந்த பட்ஜெட் தற்போது 80 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

யாரை தக்க வைக்கிறார்கள்

யாரை தக்க வைக்கிறார்கள்

இந்த ஐபிஎல் போட்டியில் எந்த வீரர்களை அணிகள் தக்க வைக்க விரும்புகிறதோ அந்த வீரர்களின் பட்டியலை இப்போதே கொடுக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் குறிப்பிட்டு இருக்கிறது. இதற்கு ஜனவரி 4ம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்டு இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த பட்டியலை கொடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மும்பைக்கு யார்

மும்பைக்கு யார்

சென்னை அணியின் முக்கிய வைரியான மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை தக்க வைக்க முடிவு செய்து இருக்கிறது. மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் குருனால் பாண்டியாவும் அணியில் தக்கவைக்கப்பட இருக்கிறார்கள். ரோஹித் சர்மா , கோஹ்லி, டோணி என மும்முனை போட்டியால் இந்த ஐபிஎல் கலகலக்க இருக்கிறது.

Story first published: Tuesday, January 2, 2018, 11:59 [IST]
Other articles published on Jan 2, 2018
English summary
Lot of interesting things are going to happen in upcoming IPL season. CSK, Rajasthan team will back to the IPL. IPL 2018 auction will be held in Bangalore on January 27 and 28. In this IPL budget has increased from previous Rs 66 crore to Rs 80 crore. Mumbai Indians team decided to retain Rohith Sharma and Pandya brothers in the team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X