பெங்களூர்: ஐபிஎல் ஏலத்தில் முரளி விஜய் ஏலம் எடுக்கப்படவில்லை. எந்த அணியும் அவரை ஏலம் எடுக்க முன்வரவில்லை.
ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் கிட்டத்தட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆனால் முரளி விஜய் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை.
இவருக்கு குறைந்தபட்ச தொகையே 2 கோடிதான். இதனால் கடைசியில் இவரது தொகை 1 கோடியாக குறையும். அப்போது அவர் எடுக்கப்படலாம்.
இவர் டெஸ்ட் பார்மெட்டில் விளையாடக்கூடிய வீரர் என்பதால் யாரும் ஐபிஎல் போட்டிக்கு எடுக்கவில்லை என்று கூறப்பட்டு உள்ளது.