
சிறந்த பந்துவீச்சாளர்
அப்போது அவர் பேசுகையில் மலையக மக்கள் அளித்த சிறந்த இரு பரிசுகள் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், இலங்கை மண்ணைச் சேர்ந்தவர். மற்றொருவர் உலகில் இதுவரை உருவாகிய மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான முத்தையா முரளிதரன் என்றார்.

முரளிதரன் ஹேப்பி
இதுகுறித்து முத்தையா முரளிதரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அர் கூறுகையில், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். என்னுடைய நாட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் எனது பெயரை இந்திய பிரதமர் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இந்தியாவுடன் நெருக்கம்
நான் தென்னிந்திய பெண்ணை மணந்துள்ளதால் எனக்கும், இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கம் உள்ளது. என்னுடைய மூதாதையர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாவர். நாங்கள் 4 அல்லது 5-ஆவது தலைமுறையினர் ஆவர். இலங்கையின் மூத்த சகோதரராக இந்தியா எப்போதும் விளங்கும் என்று நான் நம்புகிறேன். அந்த நட்புறவு வருங்காலங்களில் மென்மேலும் வளர வேண்டும். எங்களுக்கு இந்தியா பல்வேறு வழிகளில் உதவியுள்ளது என்றார் அவர்.

சென்னையின் மருமகன்
இலங்கையில் உள்ள கண்டியில் தமிழ் குடும்பத்தில் கடந்த 1972-ஆம் ஆண்டு பிறந்தார் முரளிதரன். கடந்த 2005-இல் சென்னை மலர் மருத்துவமனை உரிமையாளரின் மகள் மதிமலர் ராமமூர்த்தியை மணந்து கொண்டார். பிரபல கிரிக்கெட் வீரரான முரளிதரன் மிகச் சிறந்த சுழற் பந்து வீச்சாளர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை குவித்த வீரர் என்ற பெருமை பெற்ற முரளிதரன், 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும் 350 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 544 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











