
காரணம்
ரெய்னா ஒரு சிறந்த வீரராக இருக்கலாம். ஆனால் தோனியின் நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார். 2020ஆம் ஆண்டு அணியிலிருந்து அவர் பாதியிலேயே விலகினார். இதனால் அவர் மீதான நம்பிக்கை தோனிக்கும், அணி நிர்வாகத்துக்கும் போய்விட்டது..

பிரச்சினை
உங்கள் மீது நம்பிக்கை போய்விட்டால், பின்னர் யாரும் உங்களை நம்பி மீண்டும் அணியில் சேர்க்க மாட்டார்கள். ரெய்னா தனிப்பட்ட காரணத்திற்காக அணியிலிருந்து விலகியதாக கூறினாலும், அது தான் பிரச்சினைக்கு காரணம். அதன் பின்னர் வாய்ப்பு வழங்கப்பட்டும், அவர் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.

காயம்
கடந்த சீசனின் முதல் பாதியில் ரன் எடுக்க ரெய்னா திணறினார்,. பின்னர் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் எஞ்சிய போட்டியில் விளையாடவில்லை. இது போன்ற மேலும் சில காரணங்கள் இருக்கின்றன என்று அவர் கூறினார். சென்னை அணிக்காக அதிக ரன்கள், அதிக அரைசதம், நாக் அவுட் சுற்றில் அதிக ரன்கள் என பல்வேறு சாதனைகளை ரெய்னா படைத்திருந்தார்.
Recommended Video

குற்றச்சாட்டு
எனினும் அணியின் எதிர்கால திட்டத்தில் ரெய்னாவின் பங்கு இல்லை என்பதால் தான் ரெய்னாவை ஏலத்தில் எடுக்கவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ..ஓ., கூறினார். சென்னை அணி எடுக்கவில்லை என்றாலும், மற்ற அணிகள் யாரும் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











