லாகூர் : ஐபிஎல் தொடர் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் தங்களது நாட்டில் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது.அந்த வகையில் பாகிஸ்தான் அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற தொடரை நடத்தி வருகிறது.
இந்த தொடர் தற்போது பாகிஸ்தானுக்கு நல்ல வருமானத்தை பெற்று வந்தாலும், ஐபிஎல் மதிப்பில் பத்தில் ஒரு பங்கு கூட இந்த தொடருக்கு கிடையாது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரை காலி செய்ய வேண்டும் என்பதற்காக தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஐபிஎல் தொடர் நடைபெறும் அதே காலகட்டத்தில் முதல் முறையாக நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருகிறது.
