
வசீம் அக்ரம் கருத்து
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வசீம் அக்ரம் பேசுகையில், நவாஸ் வீசிய பந்தின் உயரம் குறைந்து தான் வந்தது. அதனை நோ பாலா இல்லையா என்று சரியாக சொல்ல முடியவில்லை. வெறும் கண்களால் அந்த பந்தை பார்க்கும் போது நோ பாலாக தெரியவில்லை. ஆனால் ஸ்லோ மோஷனில் பார்க்கும் போது பந்தின் உயரம் குறைந்தது போல் தெரிந்தது.

தொழில்நுட்பம் எதற்கு?
ஆனால் , எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் நடுவரிடம் நோ பால் என முறையிடுவார். இதில் கோலி மீது எந்த தவறும் இல்லை. ஆனால் இது போன்ற பெரிய போட்டியில் நடுவர்கள் தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதனை செய்யாமல் பிரச்சினையை ஏன் உண்டாக்குகிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

வக்கார் யூனிஸ் கேள்வி
இதனைத் தொடர்ந்து பேசிய வக்கார் யூனிஸ், பந்து நோ பாலா இல்லையா என்று Leg side நடுவர் தான் அறிவிப்பார். ஆனால் இம்முறை விராட் கோலி கேட்ட பிறகு நடுவர் எராஸ்மஸ், ரீப்ளேவை பெரிய ஸ்கிரினில் பார்த்த பிறகு தான் அதனை நோ பால் என அறிவிக்கிறார். நான் அது நோ பாலா இல்லையா என்ற சர்ச்சைக்குள் போக விரும்பவில்லை.

நடுவர்கள் மீது புகார்
ஆனால் நடுவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். மெயின் நடுவரிடம் ஆலோசனை செய்த பிறகு, அதனை மூன்றாம் நடுவருக்கு அனுப்பி பார்க்க சொல்லி இருக்க வேண்டும். அதனை செய்யாதது பெரிய தவறு. அதற்காக தான் மூன்றாம் நடுவர் இருக்கிறார் என்று வக்கார் யூனிஸ் கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சோயிப் மாலிக்கும், மூன்றாம் நடுவரின் உதவியை நாடாமல் விட்டது தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











