ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லக்னோ அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனை பார்த்த அணியின் ஆலோசகர் கம்பீர், செம டென்ஷனில் அமர்ந்திருந்தார். டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதல்லில் பந்துவீசியது.
ஜெய்ப்பூர் மைதானம் சுற்ற அளவில் மிக சிரியது. இந்த ஆடுகளத்தில் நீங்கள் கொஞ்சம் ரிஷ்க் எடுத்து ஆடினால் 180 முதல் 200 ரன்களை கூட தொடலாம். ஆனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஒரு எக்ஸ்பிரல் ரயில் என்பது வேகமாக ஓட, அதன் இன்ஞ்சின் முதலில் சரியாக ஓட வேண்டும். இஞ்சின் கோளாறு ஆனால் ஒட்டு மொத்த ரயிலும் நின்றுவிடும். பவர்பிளேவில் ஐரு அளவுக்கு அதிரடியாக ஆடி இருந்தால் கூட லக்னோ அணி 50 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும். ஆனால் லக்னோ அணி 37 ரன்களை மட்டுமே எடுத்தது.
இவ்வளவு குறைவான ரன்களை அடித்தால், அதன் பின் களமிறங்குபவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு அதிரடியாக ஆட முற்படும் போது தங்களது விக்கெட்டுகளை இழக்க நேரிடும். அது தான் இந்த ஆட்டத்தில் நிகழ்ந்தது தொடக்க வீரர்கள் ராகுல் 32 பந்தில் 39 ரன்களும், மெயர்ஸ் 42 பந்துகளில் 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பதோனி 1 ரன்னிலும், பிறந்தநாள் கொண்டாடும் தீபக் சாஹர் 2 ரன்கள், ஸ்டோனிஸ் 21 ரன்கள், நிக்கோலஸ் பூரான் 29 ரன்களும் எடுக்க லக்னா ணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதில் தமிழக வீரர் ஸ்வின் 2 விக்கெட்டுகளைவீழ்த்தி 23 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.