
கொல்கத்தா வென்றது
கடைசியாக களமிறங்கிய சாம் கர்ரன் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதனை அடுத்து 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பிளே ஆப் சுற்று நழுவியது
அதில் அதிகபட்சமாக சுபமன் கில் 65 ரன்களும், கிறிஸ் லின் 46 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை கொல்கத்தா பெற்றுள்ளது. ஆனால், பஞ்சாப் அணியோ தோல்வியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து நிற்கிறது.

இருவரும் ஏமாற்றினர்
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவிய பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறியதாவது: நம்பிக்கை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட கெயில் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் எங்களை ஏமாற்றி விட்டனர். அதன்பிறகு, பூரன் மற்றும் சாம் கர்ரன் இருவரும் அணிக்கு நம்பிக்கை அளித்தனர்.

பீல்டிங்கும் படுமோசம்
அதற்கு முன்பாக 180 ரன்களை நாங்கள் கட்டுப்படுத்தி இருக்கிறோம். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பந்து வீசவில்லை என நினைக்கிறேன். கில் மற்றும் லின் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். பீல்டிங்கில் சில வீரர்கள் சொதப்பினர். அதுவே போட்டியில் தோல்வியடைய காரணம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











