
விமர்சனம்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் செய்யப்படுகிறது. முதல் போட்டியில் இந்திய அணியில் ஆடிய கோலி இரண்டாவது போட்டியில் ஆட மாட்டார். தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க உள்ளதால் இவர் இந்தியா திரும்புகிறார்.

பிளேயிங் லெவன்
இதனால் அடுத்த போட்டியில் இந்திய அணியில் கோலி ஆட மாட்டார். இவருக்கு பதிலாக அணிக்குள் கே. எல் ராகுல் வருகிறார். அணிக்குள் வரும் ராகுல் ஓப்பனிங் இறங்க உள்ளார். இன்னொரு பக்கம் ஓப்பனிங் வீரர் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் இருவரும் நீக்கப்பட உள்ளனர்.

உள்ளே வரும் வீரர்கள்
இவர்களுக்கு பதிலாக ரோஹித் சர்மா, சுப்மான் கில் இருவரும் அணிக்குள் வருகிறார்கள். இதில் ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்குவார். கில் மிடில் ஆர்டரில் களமிறங்குவார். அதேபோல் அணியில் இருக்கும் விஹாரி நீக்கப்பட்டு
ஜடேஜா அணிக்குள் வருவார்.அதேபோல் காயம் காரணமாக அவதிப்படும் ஷமிக்கு பதிலாக சிராஜ் அணிக்குள் வருவார்.

கீப்பர்
கீப்பர் சாகா நீக்கப்பட்டு பண்ட் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி இந்திய அணியில் அடுத்த போட்டியில் ரோஹித் சர்மா, கே. எல் ராகுல், புஜாரா, ரஹானே, சுப்மான் கில், பண்ட், ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற உள்ளனர்.


Click it and Unblock the Notifications