டி20 தொடர்
பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் கடந்த பிப். 20ம் தேதி தொடங்கியது. மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்று வந்த இந்த தொடரில் திடீரென வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பிஎஸ்எல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 34 போட்டிகளில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 20 போட்டிகள் உள்ளன.
மீண்டும் பி.எஸ்.எல்
இதனையடுத்து ஐபிஎல்-ஐ போன்று பிஎஸ்எல் தொடரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 5ம் தேதி முதல் பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக வீரர்கள் பலரும் அபுதாபி சென்று குவாரண்டைனில் இருந்து வருகின்றனர்.
விளக்கம்
16 தொலைக்காட்சி ஒளிப்பரபரப்பு குழுக்கள், துபாயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா குழுக்களுக்கு மட்டும் அமீரக அரசு அனுமதி வழங்காமல் உள்ளது. அபுதாபி அரசு அனுமதி வழங்கியவுடன் ஜூன் 7ம் தேதி முதல் பிஎஸ்எல் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது.
பயிற்சி ஆட்டம்
இந்நிலையில் குவாரண்டைனை முடித்துள்ள இஸ்லாமாபாத் யுனைட்டெட் மற்றும் லாகூர் குவாலண்டர்ஸ் அணி வீரர்கள் மைதானத்தில் பயிற்சி ஆட்டங்களை தொடங்கியுள்ளனர். இதில் குறிப்பாக கட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஆண்ட்ரே ரஸல், விரைவில் தனது பயிற்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ரே ரஸல்
இதுகுறித்து பேசிய ரஸல், நான் ஐபிஎல்-ல் கொல்கத்தா அணிக்காகவும், பிக் பேஷ் தொடரில் மற்றும் கரீபியம் ப்ரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளேன். ஆனால் பிஎஸ்எல் தொடர் சிறந்த ஒன்று எனக் கூறுவேன். இந்த தொடரில் உள்ள பந்துவீச்சின் தரம் மற்ற தொடர்களை விட சவாலானதாக இருக்கும். இதில் விளையாட ஆர்வமாக உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.