மும்பை : வரும் 12ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பையில் தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது.
இதையொட்டி அந்த அணியின் வீரர்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தனது குவாரன்டைனை முடித்துள்ள அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தனது மகிழ்ச்சியை வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் 2021 தொடர் நாளைய தினம் சென்னையில் முதல் போட்டியுடன் துவங்கவுள்ளது. இந்த தொடருக்கென அனைத்து அணிகளும் சிறப்பான வகையில் தயாராகியுள்ளன. பஞ்சாப் கிங்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள பஞ்சாப் அணியும் சிறப்பாக தயாராகி வருகிறது. அந்த அணியை இந்த சீசனில் முகமது ஷமி உள்ளிட்ட பௌலர்கள் சிறப்பாக வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தனது குவாரன்டைனை முடித்த சந்தோஷத்தில் மைக்கேல் ஜாக்சனின் ஸ்மூத் கிரிமினல் பாடலுக்கு சிறப்பாக நடனமாடியுள்ளார். அதை பஞ்சாப் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அவரது ஒவ்வொரு மூவ்மெண்ட்டும் தேர்ந்த நடனக் கலைஞரை நியாபகப்படுத்துகிறது.