டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. டெல்லி அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு ஏற்கனவே பறிப் போன நிலையில், இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு வாழ்வா சாவா ஆட்டமாகும்.
இந்த நிலையில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் வார்னர், பந்துவீச்சை தேர்வு செய்தார். இது குறித்து பேசிய அவர், இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் தோய்வாக இருக்கும்.போட்டி முழுவதும் மாறாது என நினைக்கிறேன்.

மேலும், பனிப்பொழிவு இருக்கும் என்பதால், இரண்டாவது பந்துவீசுவது கடினமாகும். எங்களுக்கு கடைசி போட்டி சிஎஸ்கேக்கு எதிராக சரியாக அடையவில்லை. எனினும் கடைசி 5 போட்டியில் நான்கு ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். இன்றைய ஆட்டத்தை முழ சுதந்திரத்துடனும், தெளிவான மன நிலையிலும் விளையாடுவோம்.
இன்றைய ஆட்டத்தில் ரிபல் சிங் விளையாடவில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான், நாங்களும் பந்துவீச தான் முடிவு எடுத்தோம். நாங்கள் நன்றாக தான் கிரிக்கெட் விளையாடுகிறோம். எனினும் இறுதி கட்டத்தில் சில தவறுகளை செய்துவிடுகிறோம்.

எனினும் எங்கள் அணியில் உள்ள இள்ம் வீரர்களுக்கு கற்று கொள்ள இது நல்ல தருணம் ஆகும். இன்றைய ஆட்டத்தில் ராஜபக்சாக்கு பதிலாக ஷிகந்தர் ராசா களமிறங்குகிறார் என்று ஷிகர் தவான் கூறினார்.