கெயில் அதிரடி
இந்த போட்டியில் ஒரு முடிவோடு வந்திருப்பது கெயிலின் அதிரடி ஆட்டத்திலேயே தெரிந்தது. தொடக்கம் முதலே அவர் அனாயசமாக ஆட தொடங்கினார். 6வது ஓவரில் மட்டும் 24 ரன்களை அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
ராகுல் 15 ரன்கள்
அவரை அவுட்டாக்க பெங்களூரு பந்துவீச்சாளர்கள் முயல.. அதில் சிக்கிக் கொண்டார் ராகுல். 7வது ஓவரில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுதது வந்தவர் மயங்க் அகர்வால். கெயிலுடன் இருப்பதால் பெரிதாக ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 15 ரன்களே எனக்கு போதும் என்று திருப்தியடைந்து வெளியேறினார்.
எளிதாக 100 ரன்கள்
ஆனால், கெயிலின் வேகம் நிற்கவில்லை. விரைவாக அவர் அரை சதத்தை கடந்தார். 12வது ஓவரில் பஞ்சாப் அணி மிக எளிதாக 100 ரன்களை கடந்தது. கெயிலை ஆட்டமிழக்க வேண்டும் என்ற பெங்களூரு அணியின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
ரன்வேகம் குறைந்தது
கெயிலை தவிர உடன் இருந்தவர்கள் எல்லாம் ஆட்டமிழந்தனர். 13வது ஓவருக்கு பிறகு.. அணியின் ரன் வேகம் மெதுவாக குறைந்தது. சர்பராஸ் கான், கர்ரன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததே அதற்கு காரணம்.
99 ரன்கள்
ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் நங்கூரமாக நின்ற காட்டடி மன்னன் சதத்தை நெருங்கி கொண்டிருந்தார். எவ்வளவோ முயன்றும் அவரால் சதத்தை எடுக்க முடியவில்லை. மாறாக இறுதி வரை ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்தார். அதில் 70 ரன்கள் பவுண்டரிகள்,சிக்சர்களில் வந்தது.
173 ரன்கள் குவிப்பு
20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் அருமையான ரன் ரேட்டில் இருந்த பஞ்சாப் அணி, நிச்சயமாக 200 ரன்களை கடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை.