என்னது பஞ்சாப்பிற்கு அஸ்வின்தான் கேப்டனா?.. க்ளூ கொடுத்த அணி நிர்வாகம்!
Recommended Video

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் அஸ்வின் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது.
இவ்வளவு வருடம் சென்னை அணிக்காக இருந்தவர் தற்போது பஞ்சாப் அணிக்கு சென்றுள்ளார். இதனால் சென்னை ரசிகர்களை அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
தற்போது பஞ்சாப் அணி அஸ்வினை வரவேற்று இருக்கிறது. அவர்களின் டிவிட் வைரல் ஆகி இருக்கிறது.

எத்தனை கோடி
இவர் மொத்தம் 7.60 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். சென்னை அணி இவரை வாங்க தவறிவிட்டது. பஞ்சாப் அணி இவரை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு எடுத்துள்ளது.
அஸ்வின் டிவிட்
அஸ்வின் இதன் பின் டிவிட் செய்தார். அவர் தனது டிவிட்டில் '' கிங்ஸ் லெவன் அணிக்கு சென்றது மகிழ்ச்சி. இதுதான் என் புது வீடு. சென்னை அணிக்கு நன்றி. அனைத்து அழகான நினைவுகளுக்கும் நன்றி'' என்றுள்ளார்.
பஞ்சாப்
இதற்கு பஞ்சாப் அணி பதில் சொல்லி உள்ளது. அதில் ''எங்கள் குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறோம் தல'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
கேப்டனா
இதனால் இவர் வித்தியாசமான சந்தேகம் எழுப்பியுள்ளார். அஸ்வின்தான் இனி உங்கள் அணியின் கேப்டனா என்பது போல இவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications