
கடும் சவால்
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஓய்வு வழங்கப்பட்ட ரோகித், ரிஷப் பணட், தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். மேலும் தமிழக வீரர் அஸ்வினும் 8 மாதங்களுக்கு பிறகு டி20 அணிக்கு திரும்பியுள்ளார். இதனால், இன்றைய போட்டியில் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதே கடின சவாலாக இருக்கும்.

சுழற்பந்துவீச்சு பட்டாளம்
சுழற்பந்துவீச்சை பொறுத்த வரை இந்திய அணியில் ஏற்கனவே கடும் போட்டி நிலவுகிறத. சாஹல் செம பார்மில் உள்ளார்.இரண்டாவதாக ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் இருக்கிறார். சமீபத்தில் பேட்டிங்கை நிரூபித்த அக்சர் பட்டேலும் அணியில் உள்ளார். இதை தவிர இளம் வீரர் ரவி பிஸ்னாயும் இருக்கிறார்.

ஏன் அஸ்வின் வேண்டும்?
இவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தான் அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும். அஸ்வின் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும், டி20 கிரிக்கெட்டில் ஒரு முனையில் ரன்களை கட்டுப்படுத்தி எதிரணிக்கு நெருக்கடியை தருபவர். இதனால் அஸ்வின் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும், மற்ற பவுலர்களுக்கு விக்கெட் கிடைக்கும்.
Recommended Video

ரோகித் முடிவு
மேலும் டி20 உலகக் கோப்பை தொடரில் அஸ்வின் தான் அதிக விக்கெட்டுகளை இந்தியாவுக்காக வீழ்த்தி இருக்கிறார். இதனால் அஸ்வினின் அனுபவத்தை பயன்படுத்தி கொள்ள ரோகித் சர்மா விரும்புகிறார். இதனால் இந்த தொடரில் சாஹலுக்கு சில போட்டியில் ஓய்வு அளித்துவிட்டு அஸ்வினை ரோகித் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











