இங்கிலாந்து தொடர்
கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு ஐபிஎல், தென்னாப்பிரிக்க தொடர் என டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த இந்திய அணி, டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்காக முன்கூட்டியே இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்து களம் குறித்து அங்கு ஒவ்வொரு வீரருக்கும் ஸ்பெஷல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோலிக்கு கவுரவம்
இந்நிலையில் பயிற்சியின் போது தான் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஸ்பெஷல் மரியாதை செய்துள்ளார் டிராவிட். இங்கிலாந்து மண்ணில் அதிக அனுபவம் மற்றும் நல்ல ரெக்கார்ட் வைத்துள்ள வீரர் கோலி தான். எனவே அங்கு எப்படி ஆட வேண்டும். பிட்ச்-ன் தன்மை எப்படி மாறும் உள்ளிட்டவைகளை மற்ற வீரர்களுக்கு பாடமாக எடுத்தார். இந்த வகுப்பில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிராவிட் நம்பிக்கை
இந்திய அணி ஜூன் 24ம் தேதி முதல் கவுண்டி அணியுடன் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. இங்கிலாந்து மண் குறித்து தெரிந்துக்கொள்ள, பயிற்சி போட்டியிலேயே முழு பலத்தையும் இறக்கவுள்ளதாக ராகுல் டிராவிட் கூறியிருந்தார். அதன்படியே தான் அத்தனை வீரர்களும் ஒன்றிணைந்துள்ளனர்.
பலவீனமான இந்திய அணி
இந்திய அணியை பொறுத்தவரையில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் என பல வீரர்களின் ஃபார்ம் கவலைக்கிடமாக உள்ளது. ஜடேஜாவும் தற்போதுதான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். தற்போதைக்கு இந்திய அணியின் நம்பிக்கையாக புஜாரா மட்டுமே ஃபார்மில் இருந்து வருகிறார்.