
முக்கிய மாற்றங்கள்
இப்படிப்பட்ட முக்கிய தொடரில் இந்தியா பல முக்கிய மாற்றங்களை சந்தித்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மாவே காயம் காரணமாக விலகியுள்ளார். இதே போல இந்தியாவின் முன்னணி பவுலர்களான முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல விஷயம்
இந்நிலையில் ரோகித் சர்மா இல்லாதது டிராவிட்டிற்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை வீரராக சுப்மன் கில் இருக்கிறார். இதே போல கே.எல்.ராகுல் இருக்கிறார். ஒருவேளை ரோகித் சர்மா இருந்திருந்தால் டாப் ஆர்டரில் இவர்கள் மூன்று பேரையுமே கொண்டு வருவது கடினமானதாக இருக்கும். 2 பேரையும் சேர்த்தால் மிடில் ஆர்டரில் விராட் கோலி, புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோரை அடக்க முடியாது.

புதிய திட்டம்
ஆனால் தற்போது ரோகித் சர்மா இல்லாததால் ஓப்பனிங்கில் எவ்வித போட்டியும் இன்றி கே.எல்.ராகுல் - சுப்மன் கில் ஓப்பனிங் ஆடலாம். முதல் விக்கெட்டிற்கு சட்டீஸ்வர் புஜாரா மற்றும் 2வது விக்கெட்டிற்கு விராட் கோலி களமிறங்குவார்கள். 5வது வீரராக ஸ்ரேயாஸ் ஐயரும், 6வது வீரராக ரிஷப் பண்ட்-ம் இடம் பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீதமுள்ள 5 இடங்கள்
இவர்கள் போக, மற்ற 5 இடங்களிலும் பவுலர்களை நிரப்ப சரியாக இருக்கும். ஆனால் 5 பவுலர்களுடன் தான் இந்தியா களமிறங்க போகிறதா? அல்லது 6வதாக ஒரு பவுலிங் ஆப்ஷனுக்கு ஆல்ரவுண்டர் தேவை என்று நினைக்குமா? என இறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை 6வது பவுலிங் ஆப்ஷன் தேவைப்பட்டால் ப்ளேயிங் 11ல் பெரும் மாற்றம் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











