
இன்னும் 2 சோதனை
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் டிராவிட், இன்னும் 36 மணி நேரம் இருக்கிறது. ரோகித் சர்மாவுக்கு மேலும் 2 பரிசோதனை நடைபெறும். இதில் நெகட்டிவ் என்று முடிவு வந்தால் , இந்திய அணியை ரோகித் சர்மா தான் வழிநடத்துவார். இதனால் ரோகித் சர்மா குறித்து நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. தேர்வுக்குழுவினர் தான் கேப்டன்சி குறித்து முடிவு எடுப்பார்கள்.

வாய்ப்பு உருவாகும்
இம்முறை இந்தியா வித்தியாசமான அணுகுமுறையை கொண்ட இங்கிலாந்து அணியை பார்க்கும் என்று ஸ்டோக்ஸ் கூறியது குறித்து டிராவிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிராவிட், உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இங்கிலாந்து ஆடும் ஸ்டைலை பார்த்தால், எங்களுக்கு வாய்ப்பு உருவாகும் என்று தான் தோன்றுகிறது.

கவலை இல்லை
எனினும் 2க்கு1 என்ற கணக்கில் நாங்கள் முன்னிலையில் உள்ளோம். தொடரை கைப்பற்றுவதும், விடுவதும் எங்கள் கையில் தான் உள்ளது. எங்கள் கிரிக்கெட் மீது தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இங்கிலாந்து அணி எப்படி விளையாடுகிறது என்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.நாங்கள் நேர்மறையான எண்ணங்களுடன் விளையாடுகிறோம்.

20 விக்கெட்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கடந்த முறை 2வது இடத்தை பிடித்தோம். இம்முறை 3வது இடத்தில் இருக்கிறோம். என்னை பொறுத்தவரை 20 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும். ரோகித் இல்லை என்றால் தொடக்க வீரர் யார் என்று கேள்வி கேட்டதற்கு, இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











