For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது என்னடா கிரிக்கெட்டுக்கு வந்த சோதனை.. விசாகப்பட்டினத்தில் காத்திருக்கும் ஏமாற்றம்.. முழு விவரம்

விசாகப்பட்டினம் : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பாண்டில் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

ஏப்ரல், மே மாதம் முழுவதும் ஐபிஎல் தொடருக்கு சென்றுவிடும்.இதனால் வெறும் நான்கு மாதம் மட்டுமே இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

2வது ஒருநாள்

2வது ஒருநாள்

இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். டெஸ்ட் தொடரில் விளையாடிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படாமல் ஒரு நாள் தொடரிலும் தேர்வு குழுவினர் தேர்வு செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை இந்தியா பதிவு செய்தது.

இதன் மூலம் தொடரை தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

கனமழை

கனமழை

இதற்காக இரு அணி வீரர்களும் இன்று விசாகப்பட்டினம் செல்கின்றனர். விசாகப்பட்டினம் எப்போதுமே இந்தியாவுக்கு சாதகமான மைதானமாக விளங்கி இருக்கிறது. மேலும் ரன் குவிப்புக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருக்கும் என்பதால் நாளை ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் தற்போது பெரிய ட்விஸ்ட் ஒன்றை வருண பகவான் நடத்தி இருக்கிறார். கோடை காலமான மார்ச் மாதத்தில் யாருமே எதிர்பாராத வகையில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.

தண்ணீர் வெளியேறும் வசதி

தண்ணீர் வெளியேறும் வசதி

குறிப்பாக விசாகப்பட்டினத்தில் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விசாகப்பட்டினம் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மைதானத்தில் தண்ணீர் வெளியேற்றுவதற்கு சிறந்த வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன மழை நின்று ஒரு மணி நேரத்திலேயே போட்டி தொடங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம்.

பாதிக்க வாய்ப்பு

பாதிக்க வாய்ப்பு

ஆடுகளத்தை மட்டும் மூடாமல் ஒட்டுமொத்த மைதானத்தையும் தார் பாயால் மூடி இருக்கிறோம். இதனால் மழையால் மைதானம் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. எனினும் மழை நின்றால் மட்டுமே எங்களால் போட்டியை தொடங்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் நாளைய ஒரு நாள் போட்டி பெரும்பாலும் 50 ஒவர் போட்டியாக நடைபெறாது என கருதப்படுகிறது சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி புதன்கிழமை நடைபெற இருக்கிறது.

Story first published: Saturday, March 18, 2023, 12:54 [IST]
Other articles published on Mar 18, 2023
English summary
Rain Predicted for Ind vs Aus 2nd odi in visakhapatnam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+