
சேப்பாக்கத்தில் பரபரப்பு
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் தமிழ்நாடு, பெங்கால் இடையிலான போட்டி நடந்தது.

183 ரன்கள் வெற்றி இலக்கு
இதில் தமிழக அணி வெற்றி பெறுவதற்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழக அணியை, பெங்கால் பந்து வீச்சாளர்கள் பதம் பார்த்து விட்டனர்.

சடசடவென சரிந்த விக்கெட்கள்
3வது நாள் ஆட்டத்தின்போது தமிழக வீரர்கள் சடசடவென சரிந்தனர். பத்ரிநாத் 21, தினேஷ் கார்த்திக் 62, அபராஜித் 33 ரன்னிலும் வெளியேறினர்.

4 ரன்களில் தோல்வி
கடைசியில் 180 ரன்களுக்கு தமிழகம் வீழ்ந்தது. இதனால் 4 ரன்களில் தமிழக அணி தோல்வியைச் சந்தித்தது.

செளரசிஷ் லஹிரி அபாரம்
பெங்கால் பந்து வீச்சாளர் செளரசிஷ் லஹிரி, 7 விக்கெட்களை வீழ்த்தி தமிழகத்தை முறித்துப் போட்டு விட்டார்.

6வது இடமே
நடப்பு ரஞ்சி தொடரில் இதுவரை 8 போட்டிகளை ஆடிய தமிழ்நாடு ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றது. 6 டிரா மற்றும் ஒரு தோல்வியைக் கண்டது. 18 புள்ளிகளுடன் தனது பிரிவில் அது 6வது இடத்திற்குப் போய் விட்டது.


Click it and Unblock the Notifications











