டெல்லி : கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக நடத்தப்படாமல் இருந்த உள்ளூர் போட்டிகளை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது.
சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடர் கடந்த 10ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அடுத்த மாதத்தில் ரஞ்சிக் கோப்பை தொடரையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏறக்குறைய ஒரு ஆண்டுகாலமாக இந்தியாவில் உள்ளூர் போட்டிகள் நடத்தப்படவில்லை. இதையடுத்து கடந்த 10ம் தேதி துவங்கி சையத் முஸ்தாக் அலி டி20 கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதி வரையில் இந்த தொடர் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக ரஞ்சிக் கோப்பை தொடரை அடுத்த மாதத்தல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள பிசிசிஐ நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பின்பற்றப்படுவது போல இதிலும் அதே மாதிரியான பயோ பபள் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.