Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“துணைக்கேப்டன் பதவியே தேவையில்ல”.. கே.எல்.ராகுல் மீதான நடவடிக்கை.. ரவி சாஸ்திரி கடும் விளாசல்!

மும்பை: இந்திய அணியின் துணைக்கேப்டன் பதவியில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ள சூழலில் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கடுமையான விமர்சனத்தை செய்துள்ளார். இனி அப்பதவியே தேவையில்லை என விளாசியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டு முன்னிலை வகித்துள்ளது.

இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் ஃபார்ம்

கே.எல்.ராகுல் ஃபார்ம்

முதல் 2 டெஸ்ட்களில் இந்திய அணி அபார வெற்றிகளை பதிவு செய்திருந்தாலும், துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் படு மோசமாக சொதப்பியது தான் சர்ச்சையை கிளப்பியது. இதுவரை அவர் ஆடிய 3 இன்னிங்ஸ்களில் 20,17, 1 என மிக குறைவாகவே ரன் அடித்தார். இதனால் அவரை நீக்கியே தீர வேண்டும் என கண்டன குரல்கள் எழுந்தன. அதற்கேற்றார் போலவே பிசிசிஐ-ம் நடவடிக்கை எடுத்தது.

பிசிசிஐ நடவடிக்கை

பிசிசிஐ நடவடிக்கை

அதாவது 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவிக்கும் போது துணைக்கேப்டன் பதவியில் இருந்து கே.எல்.ராகுலை நீக்கிவிட்டது. இதனால் அடுத்து வரும் போட்டிகளில் கே.எல்.ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? அல்லது நீக்கிவிட்டு சுப்மன் கில்லுக்கு வாய்ப்பை தருவார்களா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

ரவிசாஸ்திரி விளக்கம்

ரவிசாஸ்திரி விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து ரவிசாஸ்திரி விளாசியுள்ளார். அதில், துணைக்கேப்டனை குறித்து அணி நிர்வாகம் தான் முடிவெடுக்கும். ஆனால் என்னைக் கேட்டால் இந்திய அணிக்கு துணைக்கேப்டனையே நியமிக்க வேண்டாம் எனக்கூறுவேன். இந்திய களங்களில் சிறந்த 11 வீரர்களுடன் தான் செல்ல வேண்டும். துணைக்கேப்டன் என்ற பொறுப்பை கொண்டு வந்து சிக்கலை உண்டாக்கி கொள்ளக்கூடாது.

கடின சூழல்கள்

கடின சூழல்கள்

அயல்நாட்டு களங்களை பொறுத்தவரையில் சிறந்த வீரர்கள் மட்டுமே தேர்வாக முடியும். சுப்மன் கில் அனைத்தையும் அடித்து நொறுக்கிக்கொண்டு வந்துவிடுவார். அவர் சவால் கொடுப்பார். கே.எல்.ராகுல் ஒரு அட்டகாசமான வீரர் தான். ஆனால் அவரின் மனநிலையை புரிந்துக்கொண்டு பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. வாய்ப்புக்காக நிறைய வீரர்கள் காத்துள்ளனர். அதற்கேற்றார் போல தான் செயல்பட வேண்டும் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

Story first published: Sunday, February 26, 2023, 11:18 [IST]
Other articles published on Feb 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+