Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஓவர் மிதப்பில் சுத்தாதீங்க தம்பி” 3வது டெஸ்டில் இந்தியா தோற்றது எப்படி? விட்டு விளாசிய ரவி சாஸ்திரி

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்ததற்கு பிட்ச் தான் காரணம் என பலரும் கூறி வரும் சூழலில் ரவி சாஸ்திரி மட்டும் வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் படு மோசமாக தோல்வியடைந்துள்ளது.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 2 - 1 என்ற சூழலில் தற்போது உள்ளன. தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால் இந்திய அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தோல்விக்கான காரணம்

தோல்விக்கான காரணம்

சொந்த மண்ணில் அசைக்க முடியாத பலத்துடன் இருக்கும் இந்திய அணி இந்த முறை மோசமாக சறுக்கியதற்கு பிட்ச் மீது தான் பலரும் காரணம் கூறுகின்றனர். ஏனென்றால் நல்ல வேகமும், பவுன்ஸும் கொண்ட பிட்ச் என நினைத்து தான் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் முதல் நாளன்றே சராசரியாக 4.5 டிகிரி அளவிற்கு பந்து ஸ்பின் ஆனது. இதனால் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பிட்ச் தந்த மாற்றத்தால் முதல் நாளில் 14 விக்கெட்களும், 2வது நாளில் 16 விக்கெட்களும் சரிந்துவிட்டது.

ரவி சாஸ்திரி அதிருப்தி

ரவி சாஸ்திரி அதிருப்தி

இந்நிலையில் இந்திய வீரர்கள் மிதப்பில் சுற்றியதே இதற்கு காரணம் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அணிக்குள் பல்வேறு குழப்பங்கள் நடந்துள்ளன. இந்திய வீரர்கள் எப்படியும் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற அதிக மிதப்புடன் ஆடியது தெளிவாக பார்த்தேன். அந்த நினைப்புடன் இருந்தால் என்ன முடிவு கிடைக்கும் என தற்போது புரிந்திருக்கும்.

அவசர எண்ணம்

அவசர எண்ணம்

முதல் இன்னிங்ஸில் என்ன தவறுகள் செய்தோம் என்பதை பாருங்கள். அதிக ஆர்வத்துடனும், அவசர புத்தியுடனும் ஷாட்களை ஆடினர். ஆனால் இந்த களத்தில் அப்படி ஆதிக்கம் செலுத்த முடியாது. முதல் இன்னிங்ஸில் கோட்டையை விட்டுவிட்டு 2வது இன்னிங்ஸில் சரி செய்வது கடினம். அதுவும் 76 ரன்கள் என்ற இலக்கை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான ஒன்று.எனவே தவறுகளை சரிசெய்துக்கொள்ளுங்கள் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

சிக்கலில் ரோகித்

சிக்கலில் ரோகித்

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 9ம் தேதியன்று தொடங்கவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் இந்த போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவே அதற்கான திட்டங்களில் ரோகித் குதித்துள்ளார்.

Story first published: Friday, March 3, 2023, 15:29 [IST]
Other articles published on Mar 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+