
சாஸ்திரி விரும்பியபடி மாற்றம்
இந்த நிலையில் மேற்கண்ட இரண்டு பதவிகளுக்கும் புதிய ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதுவும் கோச் ரவிசாஸ்திரி விருப்பப்படியே நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல ஆலோசனை
"பவுலிங் மற்றும் பேட்டிங் ஆலோசகராக பயிற்சியாளர் விரும்பும் நபர்கள் பொறுப்பேற்கும் அணி இப்போதுதான் கிடைத்துள்ளது. பயிற்சியாளர் கருத்தும் மிக தேவைதான். ஜாகீர் கான், ராகுல் டிராவிட் இருவரும் நல்ல ஆலோசகர்கள்தான். அவர்கள் இப்போதல்ல, எதிர்காலத்தில் தேவைப்படும் நேரத்தில் நல்ல ஆலோசனைகளை வழங்குவர்." என்று ரவிசாஸ்திரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

8 கோடி சம்பளம்
இதனிடையே ரவி சாஸ்திரிக்கு ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் வழங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. முன்னாள் கோச் அனில் கும்ப்ளேவுக்கு ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

ஐபிஎல் போட்டி
மற்ற மூன்று துணை கோச்சுகளுக்கு இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். அது ஐபிஎல் போட்டிகளுக்கும் தொடரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











