சென்னையைவிட்டு போனார்
இவ்வளவு வருடம் சென்னை அணிக்காக இருந்தவர் தற்போது பஞ்சாப் அணிக்கு சென்றுள்ளார். இதனால் ஏற்கனவே சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். பலரும் ஏன் எடுக்கவில்லை என்று கூட கேள்வி கேட்டு இருந்தார்கள்.
|
அறிவிப்பு
முன்பே அஸ்வின்தான் இனி பஞ்சாப் அணியின் கேப்டனா என்பது போல இவர் கேள்வி எழுப்பி இருந்தார்கள். தற்போது அது உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்து பஞ்சாப் அணி டிவிட்டரில் எங்கள் புதிய கேப்டன் என்று டிவிட் செய்து இருக்கிறது.
|
என்ன
இதுகுறித்து அஸ்வின் டிவிட் செய்துள்ளார். அதில் ''கிட் ஹாரிங்டன் இதை எதிர்க்க மாட்டார் என்று நினைக்கிறேன்'' என்றுள்ளார். பிரபல கிட் ஹாரிங்டன் என்ற நடிகர் கிங் என்ற வார்த்தையால் அடிக்கடி அழைக்கபடுவார். அதை வைத்து இவர் டிவிட் செய்துள்ளார்.
|
பல வாழ்த்து
இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர் ''வாழ்த்துக்கள் அஸ்வின். கெத்து. சென்னை ரசிகர்கள் உங்களை மிஸ் செய்வார்கள். ஆனாலும் சந்தோசம்தான். மீசையை முறுக்கு'' என்றுள்ளார்.