தலைவா வா.. தலைமை ஏற்க வா.. கேப்டன் அஸ்வின் என்ன சொன்னார் தெரியுமா?
Recommended Video

சென்னை: தான் கேப்டன் ஆனது குறித்து தமிழக வீரர் அஸ்வின் டிவிட் செய்து இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் ஏலத்தில் இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது.
இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதேபோல அவரது டிவிட்டும் வைரல் ஆகி இருக்கிறது.

சென்னையைவிட்டு போனார்
இவ்வளவு வருடம் சென்னை அணிக்காக இருந்தவர் தற்போது பஞ்சாப் அணிக்கு சென்றுள்ளார். இதனால் ஏற்கனவே சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். பலரும் ஏன் எடுக்கவில்லை என்று கூட கேள்வி கேட்டு இருந்தார்கள்.
அறிவிப்பு
முன்பே அஸ்வின்தான் இனி பஞ்சாப் அணியின் கேப்டனா என்பது போல இவர் கேள்வி எழுப்பி இருந்தார்கள். தற்போது அது உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்து பஞ்சாப் அணி டிவிட்டரில் எங்கள் புதிய கேப்டன் என்று டிவிட் செய்து இருக்கிறது.
என்ன
இதுகுறித்து அஸ்வின் டிவிட் செய்துள்ளார். அதில் ''கிட் ஹாரிங்டன் இதை எதிர்க்க மாட்டார் என்று நினைக்கிறேன்'' என்றுள்ளார். பிரபல கிட் ஹாரிங்டன் என்ற நடிகர் கிங் என்ற வார்த்தையால் அடிக்கடி அழைக்கபடுவார். அதை வைத்து இவர் டிவிட் செய்துள்ளார்.
பல வாழ்த்து
இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர் ''வாழ்த்துக்கள் அஸ்வின். கெத்து. சென்னை ரசிகர்கள் உங்களை மிஸ் செய்வார்கள். ஆனாலும் சந்தோசம்தான். மீசையை முறுக்கு'' என்றுள்ளார்.


Click it and Unblock the Notifications