
ஆல்ரவுண்டர்
இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் என்றால் உடனே நினைவுக்கு வருவது போல ஒரு பெயரை சம்பாதித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. இவரின் தற்போதைய செயல்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்தாலும் 2018ஆம் ஆண்டு மிக மோசமாக இருந்தது. அந்தாண்டில் அவருக்கு இந்திய அணியில் ஆடும் வாய்ப்பே அவ்வளவாக கிடைக்கவில்லை.

வாய்ப்பே இல்லை
பவுலிங், ஃபீல்டிங் என படு சொதப்பல் செய்து வந்தார். இதனால், XI அணியில் இடம் பிடிக்க முடியாமல் திணறி வந்தார். பின்னர் மனவேதனை அடைந்த ஜடேஜா, கடும் பயிற்சிக்கு பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் தனது ஃபார்மை நிரூபித்து கம்பேக் கொடுத்தார்.

உரக்கமே இல்லை
இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஜடேஜா, உண்மையை கூற வேண்டும் என்றால், அந்த ஒன்றரை வருடம் எனது வாழ்வில் மிக மோசமானது நாட்கள். என்னால் ஒருநாள் கூட நிம்மதியாக தூங்க முடியவில்லை. ஒன்றரை வருடமும் சரிவர தூங்காத நாட்களாகவே இருந்தது. அதிகாலை 4-5 மணி வரை விழித்திருந்து, மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து யோசித்துக்கொண்டிருப்பேன்."

மிகுந்த கவலை
நான் உறங்கும் நிலையில்தான் இருப்பேன். ஆனால் தூக்கம் வராது. அந்த காலகட்டத்தில் டெஸ்ட், ஒருநாள் அணிகளில் நான் இடம்பெறுவேன். ஆனால் ப்ளேயிங் 11ல் வாய்ப்பே கிடைக்காது. சர்வதேச தொடர்களுக்கு சென்றதால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று திறமையை நிரூபிக்க முடியவில்லை. அதே போல் மறுபுறம் இந்திய அணியில் எனது திறமையை நிரூபிக்கவும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

முக்கிய தருணம்
2018ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது குறித்து பதிலளித்தார். அதில் அந்த ஒரு போட்டிதான் என் வாழ்க்கையை மாற்றியது. இங்கிலாந்து போன்ற களத்தில் சிறந்த பவுலர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது, உலகில் எங்கு வேண்டுமானாலும் இனி விளையாடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தது. அதன் பிறகு தான் எனது ஆட்டம் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பானது எனக்கூறினார்.


Click it and Unblock the Notifications











