சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ஜடேஜா தற்போது தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்.
காயம் காரணமாக கடந்த ஆறு மாதமாக கிரிக்கெட் போட்டியில் விளையாடாத ஜடேஜா தற்போது முழு உடல் தகுதி பெற்று இருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் விதமாக ஜடேஜா ரஞ்சிப் போட்டியில் விளையாடுவதற்காக தமிழகம் வந்துள்ளார்.
நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சௌராஷ்டிரா அணிக்காக ஜடேஜா தமிழக அணியை எதிர்த்து விளையாடுகிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஜடேஜா வணக்கம் சென்னை என்று பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து ஜடேஜாவை வரவேற்று தமிழக ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
வீதிக்கு வந்த மைக்கேல் கிளார்க்கின் கள்ளக் காதல்.. நடுரோட்டில் அறைந்த மனைவி.. என்ன நடந்தது?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா சேர்க்கப்பட்டாலும் தனது உடல் தகுதியை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணியில் விளையாட முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.இதனால் தமிழக அணிக்கு எதிராக ஜடேஜா சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியில் உள்ளார். ஜடேஜாவுக்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக பல மீம்ஸ்களையும் தமிழக ரசிகர்கள் போட்டுள்ளனர்.
அதில் ரஜினியை ரசிகர் ஒருவர் முத்தம் கொடுப்பது போல் ஜடேஜாவுக்கு மீம் போட்டு வரவேற்று இருக்கிறார்கள். மேலும் ஜடேஜாவை அரசன் என்று குறிப்பிடும் விதமாக அவருக்கு கிரீடத்தையும் போட்டு மீம்ஸ் தயாரித்திருக்கிறார்கள். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.