ராபின்சிங் அப்ளிகேஷன்
பீல்டிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளார். அதன் பிறகு ராபின் சிங் விண்ணப்பித்து இருக்கிறார். அவர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். ஏற்கனவே 2007ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரையிலான 2 ஆண்டுகள் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர்.
ரவி சாஸ்திரி மீது புகார்
இந்நிலையில், ரவி சாஸ்திரியை தொடாமல் குற்றம்சாட்டி வருகிறார். இது குறித்து பேசிய ராபின் சிங், இப்போது இருக்கு பயிற்சியாளரின் கீழ் இரண்டு அடுத்தடுத்த உலக கோப்பைகளில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியது.
முக்கிய தருணம்
டி20 உலக கோப்பையிலும் இந்திய அணி சரியாக ஆடவில்லை. 2023ம் ஆண்டு உலக கோப்பையை மனதில் வைத்து அதிரடி மாற்றங்களை கொண்டுவர வேண்டிய தருணம். மனதளவில் ஆட்டத்திற்குள் ஆழ்ந்து செல்ல வேண்டும்.
என்ன மனநிலை?
அணியானது தற்போது இருக்கும் நிலையை கருத்தில்கொண்டு வீரர்களின் முகத்தைப் பார்த்து அவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு, முக்கியமான முடிவுகளை எடுக்க உதவ வேண்டும் என்றார்.