
சர்ச்சை
ஆஸ்திரேலியாவில் இப்படி கொரோனா விதிகளை மீறி இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக ரோஹித் சர்மா மீது பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள். டெஸ்ட் அணியில் இணைந்த அவர் பொறுப்பாக இல்லாமல் ஊர் சுற்றியதை பலரும் விமர்சனம் செய்துள்ளனர் .

விமர்சனம்
இந்த நிலையில் ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்களை ஆர்சிபி அணி கிண்டல் செய்துள்ளது. இந்திய வீரர்கள் டயட்டை மீறி பீப் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டதை ஆர்சிபி கிண்டல் செய்துள்ளது. ஒருநாள் டயட்டை மீறி சாப்பிடலாம் என்றால் நீங்கள் என்ன சாப்பிடுவீர்கள் என்று ஆர்சிபி அணி கேள்வி எழுப்பி உள்ளது.

கேள்வி
அதாவது உங்கள் கோச், ஒருநாள் உங்களுக்கு டயட்டை மீறி சாப்பிட அனுமதித்தால், என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்டுள்ளது. ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்களை சீண்டும் வகையில் ஆர்சிபி இந்த கேள்வியை எழுப்பி உள்ளது. ரோஹித் சர்மா ஆகியோர் டயட்டை மீறி சாப்பிட்டதாக கூறி ஆர்சிபி இப்படி கிண்டலாக டிவிட் செய்துள்ளது.

சர்ச்சை
ஆர்சிபி அணியின் இந்த டிவிட் பெரிய சர்ச்சையாகி உள்ளது. ரோஹித் சர்மா இந்திய வீரர். ஐபிஎல்லின் போது மட்டுமே அவர் மும்பை வீரர். இப்படி இருக்கும் போது இந்திய வீரரை ஒரு ஐபிஎல் அணி கிண்டல் செய்வது எந்த விதத்தில் நியாயம். ஐபிஎல் சண்டையை வைத்து பிரிவினை செய்வது எப்படி நியாயம் ஆகும் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மோதல்
கோலிக்கும் ரோஹித் சர்மாவிற்கும் மோதல் இருப்பதாக ஏற்கனவே இணையத்தில் பலரும் பேசி வருகிறார்கள். இப்படி இருக்கும் போது ஆர்சிபியின் இந்த டிவிட் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோலிக்கு தெரிந்துதான் இதெல்லாம் நடக்கிறதா என்று பலரும் இதை கேள்வி எழுப்பி தொடங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications