நமது பலம்
சென்னை எனக்கு 2-ஆவது வீடு. சென்னை அணியின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் அணிக்கான ஆதரவே நமது பலம்.
ஐபிஎல் சிறப்பாக...
அனைத்து வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்தும் சூழல் சென்னை அணிக்கு எப்போதும் உண்டு. சென்னை அணி மீதான எதிர்பார்ப்பே இந்தாண்டு ஐபிஎல் போட்டியை சிறந்ததாக மாற்றியுள்ளது.
2 ஆண்டுகள் ஆடாவிட்டாலும்...
அஸ்வினை சென்னை அணியில் சேர்க்க முயற்சி செய்வோம்; 18-20 வீரர்களை அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். 2 வருடங்கள் சென்னை அணி ஆடாவிட்டாலும் ரசிகர்கள் ஆதரவு கூடத்தான் செய்துள்ளது.
புரிந்து கொள்ள முடிந்தது
விக்கெட் கீப்பராக இருப்பது அணியை வழி நடத்த உதவும்.18 முதல் 20 வீரர்களை சேர்க்கவுள்ளோம். 2 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடைவிதிக்கப்பட்டதால் வருத்தம் இருந்தாலும் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ள முடிந்தது என்றார் டோணி.