
திணறல்
சரி, பெங்களூருவில் நடைபெற்ற 2வது டெஸ்டிலாவது சாதிப்பார் என்று பார்த்தால், அதில் 23 மற்றும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து கோலி ஒரே மாதிரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் விளைவாக விராட் கோலியில் டெஸ்ட் சராசரி 2017ஆம் ஆண்டுக்கு பிறகு 50க்கு கீழ் சென்றது. கோலி தீவிர பயிற்சி செய்தாலும், ரன் அடிக்க திணறுகிறார்.

என்ன காரணம்
குறிப்பாக இன் ஸ்விங், ஆப் சைடிலிருந்து ஸ்டம்பை நோக்கி வரும் பந்தை கணிக்க முடியாமல் விராட் கோலி தொடர்ந்து அவுட் ஆகிறார். இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார், விராட் கோலி பேட்டிங் செய்யும் போது மிகவும் பதற்றத்துடன் விளையாடுவதே, அவரால் ரன் குவிக்க முடியாததற்கு காரணம் என்று தெரிவித்தார்.

சகஜமாக விளையாடனும்
விராட் கோலி எப்போதும் சகஜமாக விளையாடக் கூடியவர். ஆனால் தற்போது இறுக்கமாக விளையாடுகிறார். அவர் முன்பு போல் களத்தில் சகஜமாக இருக்க வேண்டும். இதனை செய்தால் அவர் முன்பு போல் ரன் குவிப்பார். கடினமான விக்கெட்டுகளில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் போல் கோலி அதிரடியாக ஆடி இருக்க வேண்டும்.

அகாடமிக்கு அழைப்பு
விராட் கோலி அடிப்படை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அடிப்படை விஷயத்தில் தான் தவறு நிகழ்கிறது. இதனை சரி செய்ய விராட் கோலியை கிரிக்கெட் அகாடமிக்கு அழைக்கலாம் என்று நினைக்கிறேன். இங்கு வந்து பயிற்சி மேற்கொள்ளும்படி அவரிடம் கூற உள்ளேன்.இங்கு வந்து விளையாடினால் விராட் கோலிக்கு மீண்டும் ஊக்கம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications











