
எப்போதும் தயார் நிலை வேண்டும்
களத்தில் இறங்கி விட்டால் எத்தகைய சூழலையும் சமாளிக்கக் கூடிய ஆயத்த நிலையில் வீரர்கள் எப்போதுமே இருக்க வேண்டும்.

எதிரிகள் பயப்பட வேண்டாமா
நாம் ஆடுவதைப் பார்த்து எதிராளிகள் பயப்பட வேண்டும். உஷாராக வேண்டும். அப்படிப்பட்ட இறுக்கமான நிலையை நமது செயல்பாடு மூலம் காட்ட வேண்டும்.

அது இல்லாட்டி எப்படி
ஆனால் எங்களது தற்போதைய வீரர்களிடம் அந்தக் குணம் இல்லை. இதுதான் அணியை பலவீனமாக்கியுள்ளது.

வீரர்கள் மட்டும் காரணமல்ல
ஆனால் எல்லாவற்றுக்கும் வீரர்களை மட்டும் குறை சொல்வது எளிதானதுதான். ஆனால், கிரிக்கெட் அமைப்பும் இப்போது சரியாக இல்லை. அங்கேயே தவறு ஆரம்பிக்கிறது. அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.

என்ன தேவையோ அதைச் செய்ய வேண்டும்
எங்களது வீரர்களிடம் நல்ல திறமை உள்ளது. ஆனால் அதை செயல்படுத்துவதில்தான் சுணங்கி விடுகின்றனர். அதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
ஆனால் கிரிக்கெட் வாரியம் அது எதையுமே செய்யாமல் இருப்பதாக குறை கூறினார் ரிச்சர்ட்சன்.


Click it and Unblock the Notifications