
வருகிறது சீர்திருத்தம்
அணியில் சீர்திருத்தங்கள் என்ற பேச்சுகள் பலமாக அடிபடுவது ஒரு பக்கம் இருந்தாலும், கோலி, ரோகித் இடையே மறைமுகமான சண்டையும், கருத்து முரண்பாடும் இருப்பதாக பேச்சுகள் எழுந்தன. அது தொடர்பான செய்திகளும் அதிகளவு கசிந்தன.

உண்மையான தகவல்
இந் நிலையில், இதுகுறித்து உண்மையை தற்போது வெளியிட்டுள்ளார் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண். அவர் கூறியிருப்பதாவது: கோலி, ரோகித் இடையே பிளவு என பேச்சுக்கள் அடிபடலாம். ஆனால் பிசிசிஐ இதை ஒரு போதும் ஏற்காது.

சண்டை இல்லை
யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படும். இருவருக்கும் இடையே பிளவு இருப்பது முற்றிலும் உண்மை அல்ல. ஏனெனில், களத்தில் கோலி தடுமாறும்போது ரோகித், உடனடியாக சென்று ஆலோசனையை கூறியிருக்கிறார். இது அனைவருக்கும் தெரியும்.

நம்ப வேண்டாம்
இருவரும் நட்புடன்தான் இருக்கின்றனர். உலக கோப்பையில் ரோகித் சிறப்பாக செயல்பட்ட போது தாமாக முன் வந்து உற்சாகப்படுத்தியது கோலி தான். எனவே சண்டை என்பது வீண் வதந்தி, நம்ப வேண்டாம் என்றார்.


Click it and Unblock the Notifications











