காயத்தால் விலகிய மிஸ்ரா
ஐபிஎல் 2020 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா 3 போட்டிகளில் விளையாடிய நிலையில் காயம் ஏற்பட்டு தொடரிலிருந்து விலகினார். கடந்த தொடரில் ஐபிஎல்லின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய (170) லசித் மலிங்காவின் சாதனையை முறியடிக்க அவருக்கு வாய்ப்பு இருந்தது.
160க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள்
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி அவர் இதுவரை 160க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் கடந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பௌலர் என்ற சாதனையை தவறவிட்டுள்ளார். அந்த சாதனையை இந்த சீசனில் அவர் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
தவறவிட்ட மிஸ்ரா
இந்நிலையில் தான் மீண்டும் இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு திறனுடன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த ஆண்டில் தனது அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி விளையாடிய நிலையில் தான் அணியில் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கென தான் 13 வருடங்கள் காத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறப்பான திறமை
தொடர்ந்து பேசிய அவர், ரிஷப் பந்த் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ளது குறித்து மகழ்ச்சி தெரிவித்துள்ளார். ரிஷப்புடன் தனக்கு சிறப்பான புரிதல் உள்ளதாகவும் அவர் கடந்த 4 -5 மாதங்களில் தன்னுடைய போட்டி மற்றும் பிட்னசை சிறப்பான வகையில் மாற்றிக் கொண்டுள்ளதாகவும் மிஸ்ரா மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.