டெல்லி : கொரோனா ஊரடங்கில் பாதுகாப்பாக வீட்டில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், பிரத்யேக சவால் ஒன்றை ரோகித்திற்கு விடுத்திருந்தார்.
இந்த சவாலை ஏற்ற துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, அதை வெற்றிகரமாக முடித்து, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த சவாலை ஏற்க ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார் ரோகித் சர்மா.
சச்சின் விஷயத்தில் பொய் சொன்ன கிரிக்கெட் வீரர்.. ஆதாரத்துடன் கிழித்து தொங்கவிட்ட ரசிகர்கள்!
சர்வதேச அளவில் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்பதை வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவிற்கு பிரத்யேகமாக ஒரு சவாலை விடுத்திருந்தார்.
இந்த சவாலை ஏற்று அதை வெற்றிகரமாக முடித்துள்ளார் ரோகித் சர்மா. பேட்டின் கைப்பிடியால் பந்தை கீழே விழாமல் அடிப்பதே அந்த சவால், மேலும் தான் பாதுகாப்பாக வீட்டில் இருப்பதையும் உறுதி செய்துள்ள ரோகித் சர்மா, இந்த சவாலில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் மற்றும் அஜிங்க்யா ரஹானேவையும் டேக் செய்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவர் வீடியோவை பதிவிட்டுள்ளார்.