
ரோகித் வெறி
கேப்டன் ரோகித் சர்மா கடைசியாக 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில சதம் விளாசினார். இதனையடுத்து 51 இன்னிங்ஸ்களாக ரோகித் சதம் இடிக்கவில்லை. இந்த தொடரில் கூட ரோகித் அதிரடியாக ஆடினாலும், சதத்தை தொடவில்லை. இதனால், சதம் அடிக்க வேண்டிய வெறியுடன் ரோகித் விளையாடினார்.

அடுத்தடுத்து அரைசதம்
முதலில் பொறுமையாக விளையாடிய ரோகித் , சுப்மான் கில் ஜோடி பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். முதல் 10 ஓவரிலேயே இந்திய அணி 82 ரன்கள குவித்தது. சுப்மான் கில் 2 சிக்சர்களை பறக்கவிட்டு 33 பந்துகளில் எல்லாம் அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் ரோகித் 41 பந்தில் 50 ரன்களை பூர்த்தி செய்தார்.

ரோகித் சதம்
தொடர்ந்து அதிரடியை காட்டிய இந்த ஜோடி, கிடைக்கும் வாய்ப்பை பவுண்டரிக்கு விரட்டினார். ரோகித் சர்மா 6 சிக்சர்கள், 9 பவுண்டரிகளை விளாசி 83 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 16 மாதங்களுக்கு பிறகு சதத்தை பூர்த்தி செய்தார்.

சுப்மான் கில் சாதனை
எனினும் ரோகித் 101 ரன்னில் பிராஸ்வெல் பந்தில் சதம் போல்ட் ஆனார். எனினும் சுப்மான் கில் அதிரடியை காட்டி 72 பந்தில் சதம் விளாசினார்.இதில் 13 பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். சுப்மான் கில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 360 ரன்களில் விளாசி, அதிக ரன்கள் குவித்த பாபர் அசாமின் சாதனையை அவர் சமன் செய்தார்.


Click it and Unblock the Notifications