சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடிய ரோகித் சர்மா, சுப்மன் கில்லுடன் இணைந்து 70 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் அடித்துள்ளார்.

ஆயினும் 26 ரன்களில் அவர் அவுட்டாகியுள்ளார். ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து இந்த போட்டியில் பங்கேற்று விளையாடினாலும் தன்னுடைய நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரோகித்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி விளையாடி முடித்த நிலையில் தற்போது இந்தியா தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. முதலில் களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் பார்ட்னர்ஷிப்பில் 70 ரன்களை அடித்தனர்.
மேலும் முதல் முறையாக சுப்மன் கில்லுடன் இணைந்து இந்த போட்டியில் விளையாடியுள்ளார் ரோகித் சர்மா. இந்நிலையில் இந்த போட்டியில் அடித்த சிக்ஸ் மூலம் ஆஸதிரேலியாவிற்கு எதிரான தனது 100வது சிக்ஸை அவர் பூர்த்தி செய்துள்ளார். இந்த சாதனையை செய்துள்ள முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது.