
சாதனையை புறம் தள்ளுவேன்
ரோகித் சர்மாவின் முதன்மை திட்டமாக தனிப்பட்ட சாதனைகளை விட கோப்பைகள் தான் முக்கியம் எனக்கூறியுள்ளார். அதாவது ஒரு விளையாட்டில் எத்தனை சதங்கள் அடிக்கிறோம், அடுத்தவர்களின் சாதனைகளை முறியடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. சாம்பியன்ஷிப் கோப்பைகளை எப்படியாவது வென்றுவிட வேண்டும். அதற்காக மட்டுமே முதலில் பணிபுரிய வேண்டும்.

வீரர்களுக்கு வாய்ப்பு
கோலி - ரவி சாஸ்திரி ஆகியோரின் பதவி காலத்தில், வீரர்கள் தங்களை நிரூபிக்க தகுந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆனால் அதனை மாற்றி அமைக்க ரோகித் சர்மா விரும்பியுள்ளார். அதாவது, சரியான வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்தால் தான் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பதற்றமின்றி பெரிய தொடர்களை எதிர்கொள்வார்கள் எனக்கூறியுள்ளார்.

கடினமான சூழல்கள்
3வது திட்டமாக அனைத்து வீரர்களையும் மோசமான சூழல்களை எதிர்கொள்ள தயார் படுத்துவேன் என ரோகித் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஐசிசி தொடர்களின் அரையிறுதி போன்ற நாக் அவுட் போட்டிகளில் 10 ரன்களுக்கு 3 விக்கெட்கள் கூட சரியலாம். ஆனால் அப்படிபட்ட சூழலில் இருந்து எப்படி மீண்டு வருவோம். மிடில் ஆர்டர் அந்த சூழலில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தான் அடுத்த ஒரு வருடத்திற்கு நான் வீரர்களை தயாராக வைப்பேன் எனக்கூறியுள்ளார்.

கேப்டன் முக்கியமில்லை
ரோகித் சர்மாவை பொறுத்தவரையில் கேப்டன்சி என்பது ஆட்டத்தில் குறைந்த அளவிலேயே தேவைப்படும் ஒன்றாக இருக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு வீரரும் சரியான முடிவுகளை அவர்களே எடுக்க வேண்டும். அதன்படி செயல்பட்டால் வெற்றி தான் எனக்கூறுகிறார். இதற்கு அவர் கூறிய உதாரணம், " மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. எனக்கு சிறப்பான வீரர்களை அணி நிர்வாகம் ஏற்படுத்திக்கொடுத்தது. அவர்களால் தான் வெற்றி உறுதியானது எனக்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications