2 நாள் ஓய்வு
ரோகித் சர்மாவுக்கு லேசான முதுகில் தசைப் பிடிப்பு காயம் தான் ஏற்பட்டது. அதை மீறியும் அவர் விளையாடி இருந்தால் காயம் பெரியதாகி இருக்கலாம். அதனை கருத்தில் கொண்டு தான் ரோகித் சர்மா முன் எச்சரிக்கையாக போட்டியிலிருந்து விலகியதாக பிசிசிஐ வட்டார தகவல் தெரிவிக்கின்றன. தற்போது ரோகித் சர்மாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 2 நாள் ஓய்வில் இருந்தார்.
அதிக வாய்ப்பு
தற்போது ரோகித் சர்மா 4வது மற்றும் 5வது டி20 போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியுடன் அமெரிக்கா சென்றுள்ளார். 4வது போட்டி சனிக்கிழமை தான் நடைபெறும் என்பதால், மேலும் 2 நாள் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 100 சதவீதம் தசைப் பிடிப்பு வலியிலிருந்து ரோகித் குணமாக அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்தியாவுக்கு பலம்
ரோகித் சர்மா கடைசி 2 போட்டியில் விளையாடுவது 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. ஏற்கனவே ஜிம்பாப்வே தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், ரோகித் சர்மாவும் கடைசி 2 டி20 போட்டிகளில் விளையாட ஆர்வமாக உள்ளார். இதனால் இந்திய அணிக்கு ரோகித் சர்மாவின் வருகை பலமாகவே பார்க்கப்படுகிறது.
ரசிகர்களின் ஆசை
இந்த நிலையில் ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்து, அவரை பிடிக்காத ரசிகர்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர். அதற்கு பதிலடி தரும் விதமாக ரோகித் சர்மா உடல் எடையை குறைத்து , ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஒரு வேலை ரோகித் 4வது டி20 போட்டியில் விளையாடவில்லை என்றால் , அவருக்கு பதில் இஷான் கிஷன் களமிறங்கலாம்.