நலம் விசாரிப்பு
அப்போது ரோகித் ஷர்மா மீனாவிடம் நலம் விசாரித்தார். அத்துடன் தனது கையெழுத்து போடப்பட்ட தொப்பியையும் பரிசாக வழங்கினார். இந்தச் சம்பவம் ரசிகையான மீனாவை நெகிழ செய்தது.
87 வயது ரசிகை
இதே போட்டியில் மற்றொரு ஆச்சர்யதக்க சம்பவமும் நடந்தது. அதிரடியாக ரோகித் சர்மா விளையாடிய போது, மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளந்தது. அப்போது, ஒரே ஒரு ரசிகை மட்டும், சமூக வலைத்தளம் மட்டுமல்லாது செய்தி ஊடகங்களிலும் ட்ரெண்டானார்.
ஆசிர்வாதம்
சாருலதா என்ற 87 வயது ரசிகை, தேசிய கொடியினை முகத்தில் வரைந்து கொண்டும், பீப்பி ஊதி வீரர்களை உற்சாகப்படுத்தினார். போட்டிக்கு பின்பு மூதாட்டி சாருலதாவை சந்தித்த ரோகித் சர்மா அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார். ரோகித்தை ஆரத்தழுவிய மூதாட்டியும் அவருக்கு ஆசை முத்தங்களை வழங்கினார்.
இந்தியா வெற்றி
இந்த போட்டியில், வங்கதேச அணி 48 ஓவரில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எனவே, இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 13 புள்ளிகளை பெற்ற இந்தியா 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.