
ரோகித் அதிரடி
ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் அடித்து 12 ரன்கள் அடித்தார். ஆனால் மறுபுறம் கேஎல் ராகுல் மோசமாக விளையாடி ரன்களை சேர்க்க தடுமாறினார். இது அவர் பார்மில் இல்லலாததையே காட்டியது. இதனையடுத்து அவர் 20 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபுறம் அதிரடி காட்டிய ரோகித் சர்மா 66 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மற்றவர்கள் தடுமாற்றம்
இதே போன்று 2வது நாளை இந்திய அணி 77 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற ஸ்கோருடன் தொடங்கியது. அஸ்வின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். ஒரு புறம் ரோகித் சர்மா பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவதை போல் அதிரடி காட்ட, மற்ற பேட்ஸ்மேன்கள் வேறு ஆடுகளத்தில் விளையாடுவது போல் தடுமாறினர்.

தனி ஆளாக போராட்டம்
அப்போது புஜாரா 7 ரன்களில் எடுத்த போது தேவையில்லாமல் ஸ்விப் ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, பந்து இடதுபுறம் செல்வதை தொட்டு, விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். தனது அறிமுக போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி தடுமாறிய போது, ரோகித் சர்மா மட்டும் தனி ஆளாக போராடினார்.

ரோகித் சதம்
குறிப்பாக பாட் கம்மின்ஸ் ஓவரில் தன்னுடை புல் ஷாட்டை ஆடி சிக்சருக்கு விரட்டினார். இதன் மூலம் ரோகித் சர்மா 171 பந்தில் சதத்தை விளாசினார். இது டெஸ்ட் கேப்டனாக ரோகித் அடிக்கும் முதல் சதமாகும். இதே போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் ரோகித் சர்மா சதம் அடித்தார், இதன் முலம் ஆதிரேலியாவின் முதல் இன்னிங்சை விட இந்திய அணி முன்னிலை பெற்றது. இன்னும் இந்தியா கூடுதலாக 100 ரன்கள் முன்னிலை பெற்றால், அது பெரும் சாதகமாக அமையும்.


Click it and Unblock the Notifications











