ஆக்லாந்து: வரவர, மாமியா கழுத போல போனாளாம்.. இந்த சொலவடை யாருக்கு பொருந்துதோ இல்லையோ ரோகித் ஷர்மாவுக்கு சாலப்பொருந்தும் போல இருக்கு.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருமுறை இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமை கொண்ட ரோகித் ஷர்மாவை, நடப்பு உலக கோப்பையில், இந்திய அணி மிகவும் எதிர்பார்த்திருந்தது. ஆனால், ரோகித்திடம் இருந்து கிடைப்பதோ வேறு மாதிரி இருக்கிறது.

உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் ஷர்மா 150 ரன்களை எடுத்தார். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக 15 ரன்கள் எடுத்த ரோகித், தென் ஆப்பிரிக்கா போட்டியில், டக் அவுட் ஆகி ஏமாற்றஇனார்.
குட்டி அணியான யு.ஏ.இக்கு எதிரான போட்டியில், தட்டித் தட்டி 57 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் நின்றார். ஆனால், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 7 ரன்களில் நடையை கட்டினார்.

இந்நிலையில், இன்று ஜிம்பாப்வே குவித்த 287 ரன்களை துரத்த வேண்டிய நிலையில், கெக்க, பிக்கே என்று ஒரு ஷாட்டை தூக்கியடித்து 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார் ரோகித்.