
15வது ஆசிய கோப்பை
சச்சின் கூட செய்யாத இந்த சாதனையை ரோகித் சர்மாவுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடருக்கு அடுத்ததாக பெரிய தொடராக கருதப்படுவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தான். 1984 ஆண்டு முதல் நடைபெற்ற இந்த தொடர் தற்போது 15-வது சீசனை எட்டி உள்ளது.

6 தொடர்
உலகத்திலேயே கிரிக்கெட் ஆசிய கண்டத்தில் மட்டும்தான் அதிக மக்களால் பார்க்கப்படுகிறது.இதனால் ஆசிய கிரிக்கெட் போட்டி எப்போதுமே ரசிகர்களின் தனி மதிப்பை பெற்ற தொடராகும்.இந்த சிறப்புமிக்க தொடரில் அதிக முறை விளையாடிய வீரர்கள் என்ற பட்டியலில் ரோகித் சர்மாவும் சச்சின் டெண்டுல்கரும் தல ஆறு தொடர்களில் பங்கேற்று சமனில் உள்ளனர்.

ரோகித்துக்கு வாய்ப்பு
இந்த நிலையில் ரோகித் சர்மா வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றால் அதிக முறை ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை படைப்பார். இவர்களுக்கு அடுத்தபடியாக சிஎஸ்கே வீரர்கள் ஜடேஜா, தோனி மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் ஆகியோர் தலா ஐந்து முறை விளையாடியுள்ளனர்.

மற்றவர்கள் எத்தனை?
விராட் கோலி ,கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா, சித்து ஆகியோர் தலா நான்கு முறை ஆசிய கோப்பை தொடரில் விளையாடி இருக்கின்றனர். ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஜெயசூர்யா பெற்றுள்ளார். இதேபோன்று அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை மலிங்கம் பெற்றுள்ளார். இதுவரை இந்திய அணி அதிகபட்சமாக ஏழு முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது,


Click it and Unblock the Notifications