
உலகக்கோப்பையின் திட்டம்
2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இனி டி20 அணியில் இளம் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகின. அதற்கேற்றார் போலவே விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டிருந்தது. இவர்கள் இனி டி20க்கு வரவே மாட்டார்கள் என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ரோகித் சர்மா விளக்கம்
இந்நிலையில் இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார். அதில், முதலில் ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ளுங்கள். ஒரு வீரரால் அனைத்து போட்டிகளிலும் ஆட முடியாது. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அடுத்தடுத்து எப்படி விளையாடுவது. ஓய்வு தேவை அவ்வளவுதான். அதற்காக இனி டி20ல் விளையாட மாட்டேன் என்றெல்லாம் கிடையாது.

அடுத்தடுத்த தொடர்கள்
அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் இருக்கிறது. அதன்பின்னர் ஐபிஎல், மற்ற டி20 தொடர்கள் இருக்கிறது. அதில் பார்த்துக்கொள்ளலாம். ஒருபோதும் நான் பின் வாங்க மாட்டேன். நிச்சயம் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவேன். ஒரு வீரர் ஓய்வில் இருந்தால், ஓய்வு பெற்றுவிட்டோம் என்று அர்த்தம் இல்லை என ரோகித் சர்மா தெரிவித்தார்.

ஓப்பனிங் இடத்தில் யார்?
தொடர்ந்து பேசிய அவர், ஓப்பனிங்கில் இடத்தில் சுப்மன் கில், இஷான் கிஷான் இருவரில் யார் இறங்குவார் என்ற கேள்விக்கு பதில் அளித்தார். அதில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்க தான் யோசித்து வருகிறோம். பெரும்பாலும் அவர் தான் ஓப்பனிங்கிற்கு களமிறங்குவார் என ரோகித் சர்மா கூறியுள்ளார். மறுபுறம் இஷான் கிஷான் சமீபத்தில் இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications