டி20 உலகக்கோப்பை ரேஸ்
உலகக்கோப்பை அணிக்காக பல்வேறு வீரர்களை மனதில் வைத்துள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தரப்படும் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருந்தார். ஆனால் தற்போது ஒவ்வொரு தொடருக்கு ஒவ்வொரு அணி என்ற முறையில் இந்தியா விளையாடி வருகிறது. இதனால் யாருக்கெல்லாம் வாய்ப்பு என புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ரோகித் பதில்
இந்நிலையில் தான் இளம் வீரர் உம்ரான் மாலிக், உலகக்கோப்பை திட்டத்தில் இருப்பதாக ரோகித் சர்மா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உம்ரான் மாலிக் தற்போது தான் இந்திய அணிக்காக அறிமுகமாகியிருக்கிறார். அவருக்கு வெவ்வேறு அணியை எதிர்த்து விளையாட வேண்டிய அனுபவம் தேவைப்படுகிறது.
திட்டத்தில் இருக்கிறார்
எனவே அவர் இன்னும் சில போட்டிகளில் விளையாடிய பின்பு தான் இந்திய தேர்வுக்குழு அவரை டி20 உலகக்கோப்பை அணியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கும். எனினும் என்னப்பொறுத்தவரையில் அவர் எங்களது திட்டத்தில் ஒரு பவுலராக இருக்கிறார். இந்திய அணிக்கு என்ன தேவை என்பதை புரிந்துக்கொண்டு தயாராக இருந்தால் போதும்.
அதுமட்டும் செய்யனும்
அதிவேகமாக பந்துவீசுவது மட்டும் தான் உம்ரானின் பணியாக இருக்கிறது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் வேகத்தோடு சேர்த்து போட்டி சூழலுக்கும் ஏற்றார் போன்று செயல்பட வேண்டும். இதனை புரிந்துக்கொண்டு தயாராகிவிட்டால், வாய்ப்புகள் உண்டு என ரோகித் சர்மா பேசியுள்ளார்.