
புளோரிடாவில் போட்டிகள்
முதல் இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக இந்திய அணியினர் புளோரிடாவின் மியாமி நகருக்கு சென்றடைந்தனர்.

ரோகித் இல்லாத போட்டோ
இந் நிலையில் அமெரிக்கா செல்லும் முன்பு கோலி எடுத்த புகைப்படத்தில் ரோகித் சர்மா போட்டோ இடம்பெறவில்லை. அதனால் அந்த போட்டோ இணையத்தில் ஏகத்துக்கும் வைரலானது. இருவருக்கும் பிரச்னை இன்னும் நீடிக்கிறது என்று நெட்டிசன்கள் உள்ளே புகுந்து கதற ஆரம்பித்தனர்.

பன்ட் வெளியிட்ட போட்டோ
இப்போது மற்றொரு போட்டோவை எடுத்து வைத்துக் கொண்டு இணைய வாசிகள் அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்திருக்கின்றனர். மியாமி நகரில் இந்திய அணி வீரர்கள் வெளியே சுற்றி திரிந்தபோது இளம் வீரரான ரிஷப் பன்ட் ஒரு போட்டோவை எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கோலி எங்கே?
அதில் இந்திய அணியின் வீரர்களான புவனேஷ்வர்குமார், தவான், ரோகித், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பன்ட் ஆகியோர் உள்ளனர். அந்த போட்டோ பதிவிடப்பட்ட உடனே இணையத்தில் ஹிட்டித்துள்ளது. அதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் எங்கே கோலி என்று கமெண்ட் செய்தனர்.

ரோகித் ஆதரவாளர்கள்
மேலும் ரோகித்தின் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் இவர்கள்தான் என்றும் சர்ச்சையை கிளப்பும் விதமாக இந்திய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால் இந்த போட்டோ சில மணி நேரத்திலேயே இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கருத்து
அணியில் ஏற்கனவே பிளவு இருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது, ரோகித் இருக்கும் இந்த போட்டோ பிளவை வெளிக்காட்டும் விதமாக உள்ளது என்றும் கருத்துகளை ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











