அர்ஜூனா விருதுக்கு ரோஹித் சர்மா பெயரைப் பரிந்துரைத்தது பிசிசிஐ!
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மாவின் பெயர் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நேற்று கொல்லத்தாவில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு ரோஹித் சர்மாவின் பெயரை பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி முதல் 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அவர், சராசரியாக 55.05 சதவீத ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 சதம் மற்றும் 5 அரை சதங்கள் அடங்கும். மும்பையைச் சேர்ந்த ரோஹித் சர்மா உலகக் கோப்பைக் கிரிக்கெட்டிலும் கலந்து கொண்டார்.
மேலும் நேற்றைய வாரிய செயற்குழுக் கூட்டத்தில், புதிய பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
Story first published: Monday, April 27, 2015, 14:16 [IST]
Other articles published on Apr 27, 2015


Click it and Unblock the Notifications