ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெறுவார்? மாதத்தை கணித்து சொன்ன பிரபல ஜோதிடர்
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் தீர்மானிக்கப்படலாம் என்று ஜோதிடர் சுமித் பஜாஜ் கணித்துள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், 39 வயதான ரோஹித் சர்மாவின் ஃபார்ம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் அவர் முறையே 11 மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்திய அணியின் அடுத்த ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, முன்னாள் கேப்டனின் அணி நிலை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஜோதிடர் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுமித் பஜாஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்" இந்தியாவின் அடுத்த ஒருநாள் போட்டி 2026 செப்டம்பர் 27 அன்று நடைபெற உள்ளது. இதற்கு இடைப்பட்ட காலத்தில், ஏற்கனவே கணித்தபடி, ஆகஸ்ட் மாதம் முதல் ரோஹித் சர்மாவின் விளையாடும் நேரம் குறைய வாய்ப்புள்ளது. என்ன நடக்க வேண்டுமோ அது நாளைக்குப் பிறகும், செப்டம்பர் ஒருநாள் போட்டிக்கான அணித் தேர்வுக்கு இடைப்பட்ட காலத்திலும் நடக்கும்."
"ஒரு கிரிக்கெட் ரசிகனாக, அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில், இவ்வளவு சிறந்த புல் மற்றும் ஹூக் ஷாட்களை விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரரை இந்தியா இதுவரை உருவாக்கியதில்லை. இருப்பினும், வாழ்க்கை ஒருவரது விதி மற்றும் கடவுளின் திட்டத்தால் மட்டுமே ஆளப்படுகிறது.
நம்முடைய விருப்பங்களும் ஆசைகளும் அதற்கு அடுத்தபடியானவையே" என்று குறிப்பிட்டுள்ளார். ரோஹித் சர்மா 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பில்லை என்று பஜாஜ் முன்னதாகவே கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 2026-க்குப் பிறகு அவரது ஓய்வு பெறும் செயல்முறைகள் தொடங்கும் என்றும் அவர் பிப்ரவரி மாதத்தில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையில், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று, ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் ரோஹித் சர்மாவுக்கு, இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி தான் அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று செய்திகள் வெளியான நிலையில், அதனை பிசிசிஐ மறுத்துள்ளது.


Click it and Unblock the Notifications

