For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பார்ட்னர்ஷிப்களை அமைக்க தவறிவிட்டோம்.. பல பாடங்களை கற்றோம்.. தோல்விக்கு பிறகு கேப்டன் ரோகித் கருத்து

சென்னை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனை அடுத்து தொடர்ந்து சொந்த மண்ணில் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவிடம் ஒரு நாள் தொடரில் இந்திய அணி தொடரை இழந்திருக்கிறது.

இதேபோன்று சொந்த மண்ணில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்துள்ளது. இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தும் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியை தழுவி இருக்கிறது .

இது குறித்து செய்தியாளரிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா தோல்விக்கு பல காரணங்களை கூறியிருக்கிறார்.

தவறி விட்டோம்

தவறி விட்டோம்

இது குறித்து பேசிய அவர் இன்றைய ஆட்டத்தில் எங்களுக்கு பெரிய இலக்கு எல்லாம் ஒன்றும் கிடையாது. நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இது போன்ற போட்டிகளில் வெற்றி பெற பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவது மிகவும் முக்கியம். அதனை நாங்கள் செய்ய தவறி விட்டோம்.

 தொடர்ந்து விளையாடி இருந்திருக்க வேண்டும்

தொடர்ந்து விளையாடி இருந்திருக்க வேண்டும்

அதனால் தான் தோல்வி அடைந்தோம். இது போன்ற ஆடுகளத்தில் தான் நீங்கள் பிறந்து வளர்ந்து இருப்பீர்கள். இந்த ஆடுகளத்தில் பொறுமையாக விளையாடி நீங்கள் ரன்கள் சேர்க்க வேண்டும். இந்த போட்டியில் நல்ல தொடக்கத்தை நாங்கள் பெற்றோம். ஆனால் ஏதேனும் ஒரு வீரர் தொடர்ந்து விளையாடி இருந்திருக்க வேண்டும்.

நல்ல விஷயங்கள்

நல்ல விஷயங்கள்

ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்று இருக்க வேண்டும். ஆனால் அதுவும் இன்று நடக்கவில்லை. எனினும் இந்த தொடரில் பல நல்ல விஷயங்களை நாங்கள் எடுத்துக் கொள்ளலாம். நடப்பாண்டில் நாங்கள் ஒன்பது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். இதில் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது.நாங்கள் எந்த இடத்தில் முன்னேற வேண்டும் என்பது குறித்து நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம்.

ஒட்டுமொத்தமாக தோல்வி

ஒட்டுமொத்தமாக தோல்வி

இது ஒட்டுமொத்த அணியின் தோல்வியாகும். இந்த தொடரில் இருந்து நாங்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஆஸ்திரேலிய அணியில் உள்ள இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களும் கடும் நெருக்கடி கொடுத்தார்கள். வேகப்பந்துவீச்சாளர்களும் நன்றாக விளையாடி எங்களுடைய விக்கெட்டை வீழ்த்தினார்கள் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Story first published: Thursday, March 23, 2023, 6:30 [IST]
Other articles published on Mar 23, 2023
English summary
Rohit sharma reveals the reason for india loss vs austraiia at chennai பார்ட்னர்ஷிப்களை அமைக்க தவறிவிட்டோம்.. பல பாடங்களை கற்றோம்.. தோல்விக்கு பிறகு கேப்டன் ரோகித் கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+