For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“பிட்ச்-ல் இப்படி ஒரு மாற்றமா?”.. 2வது ODIல் இந்திய அணி மோசமாக தோற்றது ஏன்?.. ரோகித் சர்மா விளக்கம்!

லண்டன்: இங்கிலாந்து அணியுடனான போட்டியில் குறைந்த ஸ்கோரை கூட ஏன் எடுக்க முடியவில்லை என ரோகித் சர்மா விளக்கியுள்ளார்.

இரு அணிகளும் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது.

இந்திய அணி சொதப்பல்

இந்திய அணி சொதப்பல்

முதல் ஒருநாள் போட்டியை போன்றே குறைவான இலக்கு என்பதால், இந்திய அணி எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தான் மிஞ்சியது. ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா டக் அவுட், ஷிகர் தவான் (9), ரிஷப் பண்ட் (0), விராட் கோலி (16) என அடுத்தடுத்து வெளியேறினர்.

அதிர்ச்சி தோல்வி

அதிர்ச்சி தோல்வி

லோயர் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் (27), ஹர்திக் பாண்ட்யா (29) ஆகியோர் சிறிது பார்ட்னர்ஷிப் அமைத்தனர். எனினும் அவர்களால் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை. இதனால் 38.5 ஓவர்களில் இந்திய அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் 1 -1 என சமநிலை அடைந்துள்ளது.

 ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

இந்நிலையில் தோல்வி குறித்து ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார். அதில், நாங்கள் சிறப்பான தொடக்கத்தை பெற்றோம். விக்கெட்கள் மளமளவென விழுந்தது. ஆனால் மிடில் ஆர்டரில் மொயீன் அலி - டேவிட் வில்லி ஆகியோர் பார்டர்னர்ஷிப் அமைத்தனர். எனினும் அந்த ஸ்கோர் மிகவும் கடினமான ஒன்று என கூறவில்லை. எங்கள் பேட்டிங் சொதப்பியதை ஒப்புக்கொள்கிறேன்.

 பிட்ச் கொடுத்த அதிர்ச்சி

பிட்ச் கொடுத்த அதிர்ச்சி

லார்ட்ஸ் மைதானத்தின் பிட்ச் தான் என்னை ஆச்சரியப்படுத்தியது. நேரம் போக போக பேட்டிங்கிற்கு நன்கு உதவும் என நினைத்தேன். ஆனால் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இங்கிலாந்து போன்ற அணியை எதிர்கொள்ளும் போது, ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நின்று ஆட வேண்டும். அது நடக்கவில்லை. அடுத்த போட்டியில் அனைத்தையும் சரிசெய்துக் கொண்டு வருவோம் என ரோகித் கூறியுள்ளார்.

Story first published: Friday, July 15, 2022, 12:37 [IST]
Other articles published on Jul 15, 2022
English summary
Rohit sharma's explanation on Team India lose ( இந்தியா vs இங்கிலாந்து 2வது ஒருநாள் போட்டி ) இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+